விஜய் சேதுபதியை அவமானப்படுத்திய கேமரா மேன்.. என்ன காரணம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பத்தில் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் தற்போது தனது நடிப்பு திறமையின் மூலம் முன்னேறி கதாநாயகனாக திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் இவரின் நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். தற்போது விஜய் சேதுபதி திரைப்படங்களில் ஹீரோ, குணச்சித்திர நடிகர், வில்லன், கெஸ்ட் ரோல் என பல கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.
சமீபத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பு மிகப்பெரும் பாராட்டு பெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு பின் பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வெற்றி பெற்று வருகிறார்.
இது போன்ற நிலையில், விஜய் சேதுபதி தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார். இதனை சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார். ஒரு படத்தின் ஆடிஷனில் கலந்து கொண்ட போது அப்படத்தின் கேமரா மேன் இவரை அசிங்கப்படுத்தி அனுப்பி இருக்கிறார். அந்த கேமிரா மேனை தான் இப்போ வரைக்கும் தேடிட்டு இருக்கிறேன் என்று பேட்டியில் சிரித்துக்கொண்டே கூறினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.