பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சில நாட்களிலேயே.. பாவனி வெளியிட்ட ஷாக் தகவல்.! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சில நாட்களிலேயே.. பாவனி வெளியிட்ட ஷாக் தகவல்.! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்!!


bigboss-bavani-tested-corono-positive

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் சீசன் 5ல்  போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் திறமையாக விளையாடி இறுதிநிலை வரை சென்றவர் பாவனி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி தொடரில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

மேலும் அதற்கு முன்பு அவர் ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை போன்ற தொடர்களில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சில திரைப்படங்களிலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாவனி கடந்த 2013ஆம் ஆண்டு தன்னுடன் சீரியலில் நடித்த பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால்  திருமணமான ஒரு சில வருடங்களிலேயே மனக்கசப்பு ஏற்பட்டு பிரதீப் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி ஒரு சில நாட்களே ஆகும்நிலையில் தற்போது பாவனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்று வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டி வருகின்றனர்.