மொழிகளை கடந்து கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்ற புஷ்பா 2 படத்தின் பாடல்..!
திடீரென்று நியூயார்க் சென்ற நடிகை ஆண்ட்ரியா என்ன காரணம் தெரியுமா.?
திடீரென்று நியூயார்க் சென்ற நடிகை ஆண்ட்ரியா என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் திரையுலகில் நடிகையாகவும், பாடகியாகவும், மற்றும் டப்பிங் கலைஞராகவும் பன்முகத் திறமை கொண்டவராக இருந்து வருபவர் ஆண்ட்ரியா ஜெரீமியா.
இவர், 2005ஆம் ஆண்டு வெளியான கண்ட நாள் முதல்' திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தான் அறிமுகமானார். அதன் பிறகு, சரத்குமார் நடிப்பில் வெளியான 'பச்சைக்கிளி முத்துச்சரம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து, ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வலியவன், உத்தமவில்லன், தரமணி, வடசென்னை உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆண்ட்ரியா தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
தற்போது நியூயார்க் சென்றுள்ள ஆண்ட்ரியா அங்கு சன் செட்டை ரசிக்கும் புகைப்படம், பீட்சாவின் புகைப்படம், மற்றும் நியூயார்க்கில் உள்ள வேர்ல்ட் ட்ரெட் சென்டரின் புகைப்படம் ஆகியவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து ஆண்ட்ரியா படப்பிடிப்பிற்காக அங்கு சென்றிருக்கிறாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.