#BREAKING : நடிகர் விஜய் மீது போலிஸில் புகார்.. வாக்குச்சாவடியில் அத்துமீறல்.?!
அந்த படத்துல அப்படிபட்ட சீன்ல நடிச்சது ரொம்ப தப்பா போச்சு! வேதனையில் குமுறும் நடிகை ஆண்ட்ரியா! ஏன் தெரியுமா?
அந்த படத்துல அப்படிபட்ட சீன்ல நடிச்சது ரொம்ப தப்பா போச்சு! வேதனையில் குமுறும் நடிகை ஆண்ட்ரியா! ஏன் தெரியுமா?
தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து அவர் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ஆண்ட்ரியா கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன், அஜித்துடன் மங்காத்தா, கமலுடன் விஸ்வரூபம், உத்தமவில்லன் வடசென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
வடசென்னை திரைப்படத்தில் ஆண்ட்ரியா படுக்கையறை காட்சியில் மிக நெருக்கமாக நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும் அந்த காட்சி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டாலும் சமூக வலைத்தளங்களில் லீக்கானது.அதனை தொடர்ந்து நடிகை ஆண்ட்ரியா தற்போது பட்டம் மாளிகை, மாஸ்டர், அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, வடசென்னை படத்தில் படுக்கையறை காட்சிகளில் மிக நெருக்கமாக நடித்தது தவறாக போய்விட்டது. அதன்பிறகு படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் வாய்ப்புகளே பெருமளவில் வருகிறது என வேதனையுடன் தெரிவித்துள்ளார் மேலும் நல்ல கதை, கதாபாத்திரம் ஆகியவை அமைந்தால் சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடிக்க தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.