#BREAKING : நடிகர் விஜய் மீது போலிஸில் புகார்.. வாக்குச்சாவடியில் அத்துமீறல்.?!
ராஜாராணி காதல் ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா?
ராஜாராணி காதல் ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா-சஞ்சீவ். கார்த்திக், செண்பா என்ற கதாபாத்திரத்தில் கணவன் மனைவியாக நடித்த இவர்கள் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தனர்.
மேலும் சீரியலில் மட்டுமின்றி நிஜத்திலும் காதலிக்க ஆரம்பித்தனர். அதனை தொடர்ந்து இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் ஆலியா கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமானார்.
மேலும் அண்மையில் மிகவும் கோலாகலமாக ஆல்யாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஆல்யாவுக்கு இன்று அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனை சஞ்சீவ் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.