என்னது.. பணத்திற்காகவா.! நிக்கோலை திருமணம் செய்ய காரணம் இதுதான்.! ஓப்பனாக உடைத்த நடிகை வரலட்சுமி!!
அந்த ஹிட் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஐஸ்வர்யாராய்.. இதனால் ஜோதிகா என்ன செய்தார் தெரியுமா
அந்த ஹிட் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட ஐஸ்வர்யாராய்.. இதனால் ஜோதிகா என்ன செய்தார் தெரியுமா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. இவர் தமிழில் பல திரைப்படங்கள் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார் ஜோதிகா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்திருக்கிறார்.
ஜோதிகா முதன்முதலில் அஜித் நடிப்பில் வெளியான 'வாலி' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்குப் பின்பு பூவெல்லாம் கேட்டுப்பார், குஷி, முகவரி, ஸ்நேகிதியே போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, திருமணத்திற்கு பின்பு படங்களின் நடிப்பதை தவிர்த்து வந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சில வருடங்களாக நடிப்பதிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்ட ஜோதிகா தற்போது மீண்டும் சினிமாவில் நடித்த வருகிறார்.
இது போன்ற நிலையில், 'சந்திரமுகி' திரைப்படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருப்பார். இந்த திரைப்படத்தில் ஜோதிகாவிற்கு முன்னதாக ஐஸ்வர்யா ராய் நடிப்பதற்கு படகுழு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக ஐஸ்வர்யா ராயை பின்னுக்கு தள்ளி ஜோதிகா நடிப்பதற்கு படகுழு உறுதி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இச்செய்தி இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.