ததும்பி வழியும் அழகு! பிங்க் நிற புடவையில் இளசுகளை சுண்டியிழுத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நாயகி!!

ததும்பி வழியும் அழகு! பிங்க் நிற புடவையில் இளசுகளை சுண்டியிழுத்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நாயகி!!



actress-rithu-varma-photos-viral

தமிழ் சினிமாவில் 2017ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் அனிதா என்ற  சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன்  மூலம் அறிமுகமானவர் நடிகை ரித்து வர்மா. இவர் தெலுங்கில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் நடிகை ரித்து வர்மா விருதுகளையும் பெற்றுள்ளாராம். 

இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதனைத் தொடர்ந்து ரித்து வர்மா தமிழில் துல்கர் சல்மான் மற்றும் ரக்சன் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் அவர் தமிழ் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தார். 

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரித்து வர்மா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துவார். இந்த நிலையில் அவர் தற்போது பிங்க் நிற புடவையில் அழகு ததும்பி வழிய போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.