42 வயசில் இந்த நடிகை செய்யும் காரியத்தை பாருங்கள்..! ஆண்களே செய்ய தயங்கும் விஷயத்தை அசால்டாக சன் டிவி சீரியல் நடிகை பிரவீனா..! வைரல் புகைப்படம்.!

42 வயசில் இந்த நடிகை செய்யும் காரியத்தை பாருங்கள்..! ஆண்களே செய்ய தயங்கும் விஷயத்தை அசால்டாக சன் டிவி சீரியல் நடிகை பிரவீனா..! வைரல் புகைப்படம்.!


actress-praveena-latest-news

கேரளாவை பூர்விகமாக கொண்டவர் சீரியல் நடிகை பிரவீனா. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவன் என்ற தொடர் மூலம் சினிமாத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது மகராசி என்ற தொடரில் நாயகியின் மாமியாராக நடித்துவருகிறார்.

தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தனது சொந்த ஊரான கேரளாவிற்கே சென்றுவிட்டார் பிரவீனா. இந்நிலையில், அவரது வீட்டிற்குள் திடீரென நாக பாம்பு ஓன்று புகுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பாம்பு பிடிக்கும் நபர்களுக்கு தகவல் கொடுக்க, அவர்கள் வந்து ப்ரவீனாவின் வீட்டை சுற்றி சோதனை செய்ததில் அங்கிருந்த கோழிக்கூடு அருகே பிறந்து சில நாட்களே ஆன நாக பாம்பு குட்டி ஓன்று இருந்துள்ளது.

Praveena

குட்டியாக இருந்தாலும் நாக பாம்புக்கே உரித்தான படம் எடுக்கும் தோரணையுடன் அந்த குட்டி படம் எடுத்துள்ளது. ஆனால், குட்டி ஒன்றும் செய்யாது என கூறியதை அடுத்து பிரவீனா அந்த குட்டியை தனது கையில் வாங்கிக்கொண்டு அதை வீடியோ எடுத்து இணையாயத்தில் வெளியிட்டுள்ளார்.