உலகநாயகன் கமலஹாசன் படுக்கை அறையை பார்த்து அதிர்ச்சியடைந்த குஷ்பு.. காரணம் தெரிந்தால் நீங்களும் ஷாக்காகிடுவீங்க.!

உலகநாயகன் கமலஹாசன் படுக்கை அறையை பார்த்து அதிர்ச்சியடைந்த குஷ்பு.. காரணம் தெரிந்தால் நீங்களும் ஷாக்காகிடுவீங்க.!



Actress kushboo spoke about kamalhasan room during movie shooting

புகழ்பெற்ற முன்னணி நடிகரும், இயக்குநருமான உலகநாயகன் கமல்ஹாசன் பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியும், நடித்தும் இருக்கிறார். இவரின் முதல் படம் 1960 ஆம் வருடம் வெளியான 'களத்தூர் கண்ணம்மா' ஆகும். இந்த படத்தில் தொடங்கி சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் வரை வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து மாறுபட்ட வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடியவர் .

குஷ்பு

இதன்படி, 1990ஆம் வருடம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான படம் மைக்கேல் மதன காமராஜன். இந்த படத்தில் கமல் நான்கு வேடத்தில் நடித்துள்ளார்.இளையராஜா இசையமைத்த இப்படத்தில் கமல், குஷ்பு, ஊர்வசி, நாகேஷ் போன்ற பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கமலஹாசன் நடித்ததில் மிகவும் பாரட்டப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.

இந்த நிலையில், 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சுவாரசியமான சம்பவங்கள் குறித்து தற்போது ஒரு பேட்டியில் குஷ்பு பேசியிருக்கிறார். "இப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இளையராஜா இசையும் ஒரு காரணமாகும். இதன்படி 'பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்' பாடல் படமாக்கப்பட்டது கிராபிக்ஸ் தொழில்நுட்பம் கிடையாது. இப்பாடலின் காஸ்ட்யூம்ஸ் குழுவில் நானும் இருந்தேன் .

குஷ்பு

இந்த காரணத்தினால் கமல் சார் அவரின் ரூம் சாவியை என்னிடம் தந்துவிட்டார். அவரின் ரூமிற்கு அடிக்கடி சென்று அவரது வாட்ச்கள், ஷூஸ், பெர்ப்யூம், போன்றவற்றை போட்டு அழகு பார்த்து கொள்வேன். இதனை கமல் சார் கண்டுபிடித்து என்னிடம் சிரித்துக்கொண்டே கேட்டார்" என்று குஷ்பு அப்பேட்டியில் கூறியிருக்கிறார்.