அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
வாவ்..!! முதல் முறையா இன்ஸ்டாகிராம் பக்கம் வந்த ஜோதிகா!! முதல் பதிவே சும்மா லைக்ஸ் அள்ளுது..
வாவ்..!! முதல் முறையா இன்ஸ்டாகிராம் பக்கம் வந்த ஜோதிகா!! முதல் பதிவே சும்மா லைக்ஸ் அள்ளுது..
நடிகை ஜோதிகா முதன்முறையாக சமூக வலைதள பக்கம் வந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜோதிகா. விஜய், அஜித், விக்ரம், சூர்யா என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய ஜோதிகா, தற்போது தனி ஒரு நாயகியாக நல்ல கதை அம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார். சினிமாவில் பிரபல நாயகியாக இருந்தாலும், ஜோதிகா சமூக வலைத்தங்கள் பக்கமே வராமல் இருந்தார்.
இந்நிலையில் சமூக வலைதளபக்கமே வராமல் இருந்த ஜோதிகா, முதல் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கம் வந்துள்ளார். கையில் தேசிய கொடியுடன் அவர் ட்ரக்கிங் சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் தனது முதல் பதிவில் பகிர்ந்துள்ளநிலையில், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.