பிரபல தமிழ் நடிகை: 'உள்ளாடையின்றி என்னை புகைப்படம் எடுத்தார்' இயக்குனர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு.!

பிரபல தமிழ் நடிகை: 'உள்ளாடையின்றி என்னை புகைப்படம் எடுத்தார்' இயக்குனர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு.!


actress-gangana-ranavath--sex-complaint--bollywood-dire

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். தனது சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ள அவர்  தமிழ் சினிமாவில் 2008ஆம் ஆண்டு தாம் தூம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாகும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குனர் விஜய். தலைவி என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயலலிதாவாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதலில் நயன்தாரா ஜெயலலிதா வேடத்தில் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில் தற்போது கங்கனா ஒப்பந்தமாகியுள்ளார்.

gangana ranaut

இதனை கங்கனா ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். ஹிந்தி திரையுலகில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவிக்குக்கும் கங்கானாவுக்கு இது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்றே கூறலாம்.

இந்நிலையில், தன்னை வைத்து ஆபாச படம் எடுக்க முயற்சித்ததாக பிரபல இந்தி டைரக்டர் பஹலஜ் நிஹலானி மீது கங்கனா ரணாவத் பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ஐ லவ் யூ பாஸ்’ என்ற படத்தில் நடிக்க உள்ளாடை அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடுக்க சொல்லி நிஹலானி என்னை புகைப்படம் எடுத்தார். ஆனால் அது ஆபாச படம் என்று பிறகு தெரிந்தது. அலுவலக மேலதிகாரியுடன் செக்ஸ் வைத்துக்கொள்வது போன்று நடிக்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால் அந்த படத்தில் நடிக்க விரும்பாமல் தப்பி ஓடி என் செல்ஃபோன் எண்ணைக் கூட மாற்றி விட்டேன்” என்றார்.

gangana ranaut

இந்த குற்றச்சாட்டை இயக்குனர் நிஹலானி மறுத்தார். அவர் கூறும்போது. “ஐ லவ் யூ பாஸ் ஆபாச படம் இல்லை. இந்த படத்துக்காக எடுத்த கங்கனாவின் புகைப்படங்களை பார்த்துதான் மகேஷ் பட், கேங்க்ஸ்டர் படத்துக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த பட வாய்ப்பு கிடைத்ததும் எனது படத்தில் இருந்து விலகிவிட்டார். அவர் என்னிடம் விளையாட்டு காட்டினால், நானும் பதிலுக்கு விளையாட வேண்டி வரும்” என்றார்.