42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!
"காருக்குள் வைத்து தான் அந்த விஷயங்களை செய்வோம்" மனம் திறந்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகரின் மனைவி.!?
![Actor sundarrajan wife viral interview](https://cdn.tamilspark.com/large/large_img20240204113044-70602.jpg)
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் சுந்தர்ராஜன். இவர் 90களின் காலகட்டங்களில் ஆரம்பித்து தற்போது வரை திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மாமனார் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.
மேலும் முத்து, மீனாவை மையமாக வைத்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமாக சுந்தர்ராஜன் நடித்து வருகிறார். இதனையடுத்து சமீபத்தில் இவரின் மனைவி அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சுந்தர்ராஜன் துர்கா என்ற டப்பிங் கலைஞரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்கள் இருந்து வந்தனர். இதில் ஒரு மகன் கார் விபத்தில் உயிரிழந்து விட்டார். சுந்தரராஜனின் மனைவி துர்கா சமீபத்தில் அளித்த பேட்டியில் திருமணமான புதிதில் பிஸியாக இருப்பேன். அவர் ஒரு பக்கம் சினிமாவில் பிசியாக இருப்பார்.
அப்படியிருக்க குடும்ப விஷயங்கள் அனைத்தும் காரில் வைத்து தான் பேசுவோம். காரிலேயே தான் சண்டையிடுவது, கோபப்படுவது எல்லாமே நடக்கும். ஆரம்ப காலகட்டத்தில் காரிலேயே தான் குடும்பம் நடத்தினோம் என்று சுந்தர்ராஜனின் மனைவி துர்கா மனம் திறந்து பேசியிருப்பது ரசிகர்களை நெகிழ்ச்சிபடுத்தியது.