நடிகர் பிரபாஸ் சினிமாவில் இருந்து திடீர் ஓய்வு.. இது தான் காரணமா?

நடிகர் பிரபாஸ் சினிமாவில் இருந்து திடீர் ஓய்வு.. இது தான் காரணமா?



Actor prabhas rest in cinema

தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்து நாடு முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்ற பிரம்மாண்ட சூப்பர்ஹிட்டான பாகுபலி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார். 

மேலும், இப்படத்திற்கு பிறகு அவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உருவானது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் பான் இந்தியா திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

cinema news

ஆனால், இவருடைய நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியான சஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய திரைப்படங்கள் தோல்வியை தழுவியது. அதிலும் குறிப்பாக இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான சலார் திரைப்படம் படுதோல்வியை சந்தித்து.

இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் தற்போது கல்கி 2898 ஏடி என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு ஸ்பிரிட் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். இந்த படத்தை முடித்ததும் சலார் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

cinema news

இந்த நிலையில் சமீபத்தில் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரபாஸ் அதற்கான சிகிச்சை எடுத்து வருகிறார். அதனால், இன்னும் சில மாதங்களுக்கு நடிப்பிலிருந்து விலகி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக ஸ்பிரிட் படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.