குட் நியூஸ்... அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! முழு விபரம் உள்ளே....



tn-govt-employees-da-hike-april-2025

அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை – அரசு ஊழியர்களுக்கான மகிழ்ச்சி செய்தி!

தமிழ்நாடு அரசின் ஓர் முக்கியமான அறிவிப்பாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 2% அகவிலைப்படி (DA) உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், 2025 ஜனவரி 1 முதல் இந்த உயர்வு நடைமுறைக்கு வருகிறது.

அகவிலைப்படி 53% லிருந்து 55% ஆக உயர்வு

இந்த அறிவிப்பின் மூலம், மத்திய அரசின் அதே மாதிரி நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 53% லிருந்து 55% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக முதன்மைச் செயலாளர் த. உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கவலையில் நகைபிரியர்கள் ! மீண்டும் தாறுமாறாக உயர்ந்த தங்கத்தின் விலை! இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ...

நான்கு மாத நிலுவை தொகை இம்மாத ஊதியத்துடன்

இந்த உயர்வு ஜனவரி 1, 2025 முதல் அமலுக்கு வருவதால், ஜனவரி முதல் ஏப்ரல் வரை நான்கு மாதங்களுக்கு நிலுவையாக உள்ள அகவிலைப்படி உயர்வு தொகை, மே மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்கப்படும். ஓய்வூதியதாரர்களுக்கும் இதே மாதிரியான முறையில் இந்த உயர்வு அமையும்.

16 லட்சம் பேர் பயன்பெறும்

இந்த உயர்வால் சுமார் 16 லட்சம் பேர் – அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் – நேரடி பலனடைவார்கள். ஆண்டு செலவில் கூடுதலாக ரூ.1252 கோடி மாநில அரசு செலவிட வேண்டியுள்ளது.