43 வயதிலும் என்ன ஒரு அழகு.. கவனத்தை ஈர்த்த திரிஷாவின் இளமை ரகசியம் இதுதான்.!
திடீரென மரத்திலிருந்து கசிந்த அதிசய நீர்! மக்கள் மஞ்சள், குங்குமம் பூசி தெய்வீக வழிபாடு! இறுதியில் நடந்த ட்விஸ்ட்டை பாருங்க...
பிம்ப்ரி சின்ச்வாத் பகுதியில் மரத்தில் திடீரென நீர் கசிவு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பூனே அருகிலுள்ள பிம்ப்ரி சின்ச்வாத் என்ற பகுதியில் ஒரு மரம் திடீரென சமூகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த மரத்தின் தண்டில் இருந்து தண்ணீர் கசியத் தொடங்கியது, இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
மரத்தை கடவுளாக வழிபட்ட மக்கள்
தண்ணீர் கசியும் அதிசயத்தை உணர்ந்த மக்கள், அந்த மரத்தில் மஞ்சள் மற்றும் குங்குமம் பூசி, அதை ஒரு தெய்வீக சக்தியாகக் கருதி வழிபடத் தொடங்கினர். இதை மேலும் ஒரு ஆன்மிக நிகழ்வாக மாற்றி, மரத்திலிருந்து கசியும் நீரை நோய்கள் குணமாகும் என்று நம்பி எடுத்துச் சென்றனர்.
அதிகாரிகளின் விசாரணையில் வந்த உண்மை
இது குறித்து தகவல் பெற்ற மாநகராட்சி அதிகாரிகள் உடனே அந்த இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மேற்கொண்ட சோதனையில் அந்த மரத்திற்கு அருகில் அமைந்திருந்த ஒரு தண்ணீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே மரத்தில் இருந்து நீர் கசிய்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: Video: புயலில் சிக்கிய விமானம்! பயணிகளின் அலறல் சத்தம்! அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி....
சமூக ஊடகங்களில் வைரல்
இந்த சம்பவம் அந்த பகுதியில் மட்டும் இல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இயற்கையின் அற்புதம் என்று நினைக்கப்பட்டது, ஒரு தொழில்நுட்ப கோளாறு என முடிவடைந்தது.
இதையும் படிங்க: பூனையை கைது செய்த போலிசார்! பூனை செய்த தவறு என்ன தெரியுமா?
