தினக்கூலிக்கு செல்லும் பத்மஸ்ரீ விருது பெற்ற இந்தியர்.? யார் அவர்.? என்ன நடந்தது.!?



Padma sree award winning Musucian going to coolie work

தெலுங்கானா மாநிலத்தை சார்ந்த பழங்குடியினத்தவர் தான் தர்ஷனம் மொகிலையா (Mogulaiah). இவர் வீணையைப் போன்ற கின்னாரா என்ற பழங்குடி இசைக்கருவியை இசையமைக்கும் கலைஞராக அப்பகுதியில் இருந்து வருகிறார். இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு கின்னாரா இசைக்கருவியை புதுப்பித்ததற்காக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

Social

மேலும் அப்போதைய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, வீடு கட்டுவதற்கு மனை வழங்குவதாகவும், வீடு கட்டுவதற்கு இதர செலவுகளுக்காக ஒரு கோடி வரை அரசு சார்பில் வழங்குவதாகவும் அறிவித்தார். ஆனால் சமீபத்தில் வெளிவந்த செய்தியில் தர்ஷனம் முகிலையா, தான் மிகவும் கஷ்டப்படுவதாக மனம் வருந்தி பேசியுள்ளார்.

மேலும் அவர் தற்போது கட்டுமான பணி செய்து வருவது போல புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து அவர் கூறுகையில், "என் மகனுக்கும், எனக்கும் மருத்துவ செலவு மாதம் 7000ரூ வரை ஆகிறது. அரசு சார்பில் மாதம் ரூ 10000 வழங்கப்பட்டது. அதுவும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு விட்டது. மேலும் அரசு அறிவித்த வீடு கட்டுவதற்காக வழங்கப்படவிருந்த மனை மற்றும் ஒரு கோடி பணம் நிலுவையில் உள்ளது. இதற்கு அதிகாரிகளும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர்" என்று கூறியுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு நெட்டிசன்கள் பலரும் ஒரு இசை கலைஞருக்கு இப்படியொரு நிலைமையா என்று அதிர்ச்சியில் கமெண்ட் செய்து வருகின்றனர்.