பாம்பு தோலை அடிக்கடி ஏன் கழட்டுகிறது தெரியுமா? அப்படி கழட்டும் போது மனிதர்கள் பார்க்கலாமா? அவசியம் தெரிஞ்சிக்கோங்க.....



why-snakes-shed-skin-tamil

பூமியின் பல்வேறு பகுதிகளில் வாழும் பாம்புகள் என்பது மிகவும் வினோதமான உயிரினம் எனக் கருதப்படுகிறது. இதன் செயல்கள், பழக்கங்கள் மற்ற விலங்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் தனிச்சிறப்புடையவை.

பாம்புகள் ஏன் தோலை கழட்டுகின்றன

பாம்புகள் தங்களின் தோலை கழட்டுவதை “எக்டிசிஸ்” என அழைக்கிறார்கள். இது வளர்ச்சியின் ஒரு பகுதி. பாம்பின் இனம், வயது, சூழ்நிலை போன்றவற்றைப் பொறுத்து தோல் உதிர்தல் நிகழ்கிறது. குறிப்பாக இளம் பாம்புகள் வளர்ச்சியின் போது அதிகமுறை தோலை உதிர்க்கும்.

தோல் உதிர்க்கும் முன் காணக்கூடிய அறிகுறிகள்

பாம்புகள் தோலை கழட்டுவதற்கு முன் சில சீரற்ற தன்மைகள் காணப்படும்.

கண்கள் நீலமடைந்து ஒளியை ஏற்காது

சுறுசுறுப்பு குறைந்து சாப்பிடாமலும் இருக்கும்

அமைதியாக ஒரு இடத்தில் தங்கும்

இவை தோல் உதிர்க்கும் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம்.

பாம்பு தோலை கழட்டும் விதம்

பாம்பு தோலை முழுமையாக கழட்டும் ஒரு விலங்காகும். மற்ற ஊர்வனவிலங்குகள் துண்டுகளாகவே கழட்டினாலும், பாம்பு தோல் முழுமையாக வெளியேறும். பாறை, மரம் போன்ற கடினமான மேற்பரப்புகளில் தேய்த்துவிட்டு மூக்கு பகுதியிலிருந்து ஆரம்பித்து பழைய தோலை கழட்டும்.

இதையும் படிங்க: Viral Video: வேட்டையாடிய மீனை ராஜநடை போட்டு எப்படி சாப்பிடுத்துனு பாருங்க நாரை! கண்கொள்ளா அழகிய காட்சி...

சில பாம்புகள் நிலத்தில் தோலை கழட்டினாலும், சில வகைகள் நீரிலும் அதையே செய்கின்றன.

பாம்பு தோல் கழட்டுவதால் ஏற்படும் நன்மைகள்

பாம்பின் வளர்ச்சிக்கு இடம் தரும்

பழைய தோலில் இருந்த பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகள் அகற்றப்படும்

தோலில் இருந்த காயங்கள் சிகிச்சை பெறும்

புதிய தோல் மெல்லியதும், ஆரோக்கியமுமானதும் இருக்கும்

பாம்பு தோலை கழட்டும் போது கவனிக்க வேண்டியவை

பாம்பு தோலை கழட்டும் போது கொத்தும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது, ஏனெனில் அது மிகவும் சோர்வாக இருக்கும். ஆனால் சிலர் அதை நெருக்கினால், பாதுகாப்புக்காக தாக்கும். எனவே, பாம்பு தோல் உதிர்த்துக் கொண்டிருக்கும் போது அருகில் செல்லாமல், தொட்டும் பார்க்காமல் இருக்க வேண்டும்.

 

இதையும் படிங்க: நாக பாம்புதான்!! அதுக்காக முட்டையில் இருந்து வரும்போதே இப்படியா? வைரல் வீடியோ.