அசந்து தூங்கிய பாட்டி! அருகில் வந்து ஆக்ரோஷமாக சீறி கடித்த பாம்பு.! வெளியான நடுநடுங்க வைக்கும் வீடியோ.!

அசந்து தூங்கிய பாட்டி! அருகில் வந்து ஆக்ரோஷமாக சீறி கடித்த பாம்பு.! வெளியான நடுநடுங்க வைக்கும் வீடியோ.!



what-a-nightmare-thai-grandmother-gets-bitten-by-snake


தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரை சேர்ந்தவர் சவுட்சோபா. 75 வயது நிறைந்த இவர்  இரவு தனது அறை கதவை திறந்து வைத்தவாறேஅசந்து தூங்கியுள்ளார்.அப்பொழுது அறையில் நுழைந்த நீளமான பாம்பு ஒன்று வயதான பாட்டியின் படுக்கையில் கீழ் வந்துள்ளது.

அப்பொழுது  அந்த மூதாட்டி தூக்கத்தில் தனது காலை ஆட்டிக் கொண்டிருந்ததால் ஆக்ரோஷமாக அந்த பாய்ந்து அவரது காலில் கடித்தது. இதில் வலிதாங்கமுடியாமல் அலறியடித்து எழுந்த மூதாட்டி அவசர அவசரமாக டார்ஜ் லைட்டை அடித்து பார்த்துள்ளார். 
 அப்பொழுது அவரது காலுக்கு அருகில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.

snake 

அதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சத்தம் போடவும்  அந்த பாம்பு கழிவறைக்குள் சென்று பதுங்கிக் கொண்டது. பின்னர் அடங கதவை பூட்டிய மூதாட்டி உடனே தனது மகனை அழைத்து பதனக்கு முதலுதவி  சிகிச்சை எடுத்துக் கொண்டார். பின்னர் பாம்பு பிடிக்கும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்து அங்கு விரைந்த ஊழியர்கள் கழிவறையில் பதுங்கி இருந்த பாம்பை பிடித்துச்சென்று வனப்பகுதியில் விட்டனர்.

 மூதாட்டியின் வீட்டில் இருந்த  சிசிடிவி கமெராவில் பதிவாகி இருந்த,இந்த காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.