தொடர்ந்து காதுவலியால் அவதிப்பட்ட சிறுவன்! காதை பரிசோதித்த மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! பகீர் வீடியோ..!!!
விளையாட்டு நேரத்தில் ஏற்பட்ட ஒரு சிறிய தவறு கூட குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு வியட்நாமில் நடந்த இந்த சம்பவம் உதாரணமாகியுள்ளது. தொடர்ந்து காதுவலி குறித்து புகார் தெரிவித்த சிறுவனின் காதில் மருத்தவர்கள் அதிர்ச்சிகரமான பொருளை கண்டுபிடித்தனர்.
வியட்நாமில் சிறுவன் ஒருவன் தனது காதில் தொடர்ந்து வலி மற்றும் அசௌகரியம் இருப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். முதலில் சாதாரண பூச்சி அல்லது தூசி புகுந்திருக்கலாம் என எண்ணிய பெற்றோர், அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
எண்டோஸ்கோபி பரிசோதனையில் அதிர்ச்சி
மருத்துவர்கள் எண்டோஸ்கோபி (Endoscopy) முறையில் சிறுவனின் காதை பரிசோதித்தபோது, காதின் ஆழப்பகுதியில் சிறிய மெட்டல் ஸ்க்ரூ ஒன்று சிக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இது மருத்துவர்களையே அதிர்ச்சியடையச் செய்தது.
இதையும் படிங்க: மரத்தடியில் தூங்கிய பெண்ணின் வாய்க்குள் நுழைந்த பாம்பு! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
பாதுகாப்பாக அகற்றிய மருத்துவர்கள்
சிறுவனின் செவித்திறனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு, மிகுந்த கவனத்துடன் மருத்துவர்கள் அந்த ஸ்க்ரூவை வெளியே எடுத்தனர். நேரத்தில் சிகிச்சை கிடைத்ததால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது என அவர்கள் தெரிவித்தனர்.
விளையாட்டு நேர கவனக்குறைவு காரணமா?
விளையாடும் போது தெரியாமல் அந்த ஸ்க்ரூ காதிற்குள் சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். குழந்தைகள் சிறிய பொருட்களுடன் விளையாடும் போது பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறிய வலி அல்லது அசௌகரியத்தை கூட அலட்சியம் செய்யாமல் உடனடி மருத்துவ ஆலோசனை பெறுவது குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முக்கியம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
In Vietnam, a child who went to the doctor due to discomfort in his ear had a screw removed from his ear.
— Tansu Yegen (@TansuYegen) February 16, 2026