தமிழக மீனவர்கள் அத்துமீறுகின்றனர்... இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா..!!

தமிழக மீனவர்கள் அத்துமீறுகின்றனர்... இலங்கை மீன்வளத்துறை மந்திரி டக்ளஸ் தேவானந்தா..!!



Tamil Nadu fishermen are trespassing... Sri Lanka Fisheries Minister Douglas Devananda..

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி இல்லை, என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ், வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு மீனவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது; இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி இல்லை. மேலும் பாஸ் நடைமுறையும் இல்லை. 

தமிழக மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தமிழக பாஜக தலைவரிடம் அரசாங்க ரீதியாகவும், நட்பு ரீதியாகவும்  தெரிவித்துள்ளோம்.

இலங்கை மற்றும் இந்திய ஊடகவியலாளர்கள் இங்கே நேரடியாக வந்து நிலைமைகளை பார்த்துவிட்டு செய்திகளை சேகரித்து செல்லட்டும். அப்போதுதான் இந்தியாவில் இருக்கும் மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும் என்று தெரிவித்தார்.