பெத்த தாயே மகளை படுத்தும் சித்திரவதை....அந்த விஷயத்துக்காக மார்பகங்களை நசுக்கும் தாய்! பிறப்புறுப்பை சிதைக்கும் நடைமுறை ! அழகு என்ற பெயரில் அரங்கேறும் கொடுமை!!!



harmful-traditions-against-women-worldwide

உலகம் நாகரிக வளர்ச்சியின் உச்சியை எட்டியுள்ள காலகட்டத்திலும், சில சமூகங்களில் பெண்களை பாதிக்கும் பழமையான மற்றும் வேதனையூட்டும் பழக்கவழக்கங்கள் இன்னும் தொடர்கின்றன. கலாச்சாரம் மற்றும் மரபு என்ற பெயரில் நடைமுறையில் இருக்கும் இந்த செயல்கள், பெண்களின் உடல் மற்றும் மனநலத்திற்கு தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பெண்களுக்கு எதிரான பழக்கவழக்கங்கள் குறித்து உலகளவில் மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன.

மார்பக வளர்ச்சியை தடுக்கப்படும் கொடூர நடைமுறை

ஆப்பிரிக்காவின் கேமரூன், நைஜீரியா, டோகோ மற்றும் சாட் போன்ற நாடுகளில் வளரிளம் பெண்களின் மார்பக வளர்ச்சியைத் தடுக்க ஒரு அதிர்ச்சிகரமான பழக்கம் இன்னும் நடைமுறையில் உள்ளது. பெண்கள் ஆண்களின் கவனத்தை ஈர்க்காமல் இருக்க வேண்டும் என்ற காரணத்தால், சூடான கற்கள் அல்லது இரும்புப் பொருட்களைக் கொண்டு மார்பகங்களை அழுத்தும் நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. அதிலும், பல சமயங்களில் தாய்மார்களே தங்கள் மகள்களுக்கு இந்த வலியை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த நடைமுறை உடல் பாதிப்புகளுடன் சேர்ந்து புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது.

அழகின் அடையாளமாக நீண்ட கழுத்து

மியான்மர் மற்றும் வடக்கு தாய்லாந்தில் வாழும் காயன் (Kayan) இன மக்களிடையே பெண்களின் நீண்ட கழுத்து அழகின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இதற்காக சிறுமிகளுக்கு 5 வயதிலிருந்தே கழுத்தில் பித்தளை வளையங்கள் அணிவிக்கப்படுகின்றன. வயது அதிகரிக்கும் போது வளையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதனால் கழுத்து எலும்புகள் அழுத்தம் பெற்று தோள்பட்டை கீழே இறங்கும். வளையங்களை அகற்றினால் கழுத்து உடலை தாங்க முடியாத நிலை உருவாகும் அபாயமும் உள்ளது.

இதையும் படிங்க: களிகாலம்... தண்ணீருக்குள்ளையும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை! பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஸ்கூபா டைவிங் பயிற்றுவிப்பாளர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோவால் பெண்களுக்கு எச்சரிக்கை!!!

பெண் உறுப்பை சிதைக்கும் நடைமுறை

ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பெண்களின் உடல் உறுப்புகளை சிதைக்கும் நடைமுறை இன்னும் தொடர்கிறது. மருத்துவ காரணமின்றி செய்யப்படும் இந்த செயல், 'தூய்மை' என்ற பெயரில் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இந்த நடைமுறை பெண்களின் வாழ்நாள் முழுவதும் உடல் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்துவதுடன், பிரசவ கால சிக்கல்களுக்கும் காரணமாகிறது. பல்வேறு மனித உரிமை அமைப்புகள் இதை கடுமையான மனித உரிமை மீறல் எனக் கருதுகின்றன.

விதவைகளுக்கு எதிரான கொடுமைகள்

ஆப்பிரிக்காவின் சில பழங்குடி இனங்களில் கணவனை இழந்த பெண்கள் 'சுத்திகரிப்பு' என்ற பெயரில் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். சில சமயங்களில் அவர்கள் கணவனின் சொத்துக்களில் இருந்து வெளியேற்றப்படுவதோடு, கணவனின் உறவினர்களை திருமணம் செய்யவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த நடைமுறைகள் சமூக அநீதியையும், HIV போன்ற நோய்கள் பரவுவதற்கும் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

நாகரிக வளர்ச்சி எவ்வளவு முன்னேறினாலும், சில பகுதிகளில் பெண்களுக்கு எதிரான இத்தகைய பழக்கவழக்கங்கள் தொடர்வது கவலைக்குரியதாக உள்ளது. இந்த நடைமுறைகளை முடிவுக்கு கொண்டு வர கல்வி, சமூக விழிப்புணர்வு மற்றும் சட்ட நடவடிக்கைகள் மிக முக்கியம் என்பதையும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.