#BigNews: அடுக்குமாடி கட்டிட வளாகத்தில் பயங்கர தீ விபத்து; வீடின்றி தவித்த 73 பேர் துள்ளத்துடித்து பலி..! 

#BigNews: அடுக்குமாடி கட்டிட வளாகத்தில் பயங்கர தீ விபத்து; வீடின்றி தவித்த 73 பேர் துள்ளத்துடித்து பலி..! 



South Africa Johannesburg Multi Storied Building Fire 73 Died 

 

தென்னாப்பிரிக்காவில் இருக்கும் ஜோக்கன்ஸ்பர்க், மத்திய மாவட்ட பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த தீ விபத்தில் குடியிருப்பில் இருந்த 73 பேர் பரிதாபமாக பலியாகி இருக்கின்றனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 01:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

5 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில், வீடுகள் இல்லாத மக்கள் தங்கிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தற்போது வரை 73 பேர் பலியாகிய இருக்கின்றனர்.

தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மருத்துவமனையில் அனுமதியாகி இருக்கும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிர்ப்பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.