30 மணிநேர தாக்குதல், சண்டை.. பயங்கரவாதிகள் வெறியாட்டத்தில் 40 அப்பாவி பொதுமக்கள் பேர் பலி..!

30 மணிநேர தாக்குதல், சண்டை.. பயங்கரவாதிகள் வெறியாட்டத்தில் 40 அப்பாவி பொதுமக்கள் பேர் பலி..!



Somalia Terrorist Attack 40 died

கிழக்காபிரிக்காவில் உள்ள சோமாலியாவில் அரசுக்கு எதிரான அல்-ஷபாப் பயங்கரவாத இயக்கமானது ஆயுதமேந்திய தாக்குதலில் முனைப்புடன் இருக்கிறது. அல்-கொய்தா ஆதரவுடன் செயல்பட்டு வரும் இயக்கம் இராணுவம், மக்களுக்கு எதிராக தாக்குதலை தொடர்கிறது. 

இதனால் அவ்வப்போது பயங்கரவாதிகள் - இராணுவத்தினர் இடையே மோதலும் நடைபெறுவது உண்டு. இந்நிலையில், சோமாலியாவின் தலைநகர் மொகாதிசுவில் இருக்கும் நட்சத்திர விடுதியில் பயங்கரவாதிகள் கார்களில் வெடிகுண்டை நிரப்பி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

மேலும், துப்பாக்கியுடன் மக்களை பிணைய கைதியாக பிடித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த இராணுவத்தினர் - பயங்கரவாதிகள் இடையே சண்டை நடந்த நிலையில், மொத்தமாக பயங்கரவாதிகளின் தாக்குதலில் 40 மக்கள் பலியாகியுள்ளனர். மேலும், 70 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். 

30 மணிநேரம் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடந்த சண்டையின் இறுதியில் எஞ்சிய மக்கள் பத்திரமாக அதிகாரிகளால் மீட்கப்பட்டனர்.