ஓடும் பேருந்தில் முத்தம் கொடுக்கச் சொல்லி பெண்களை சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல்; வெளியான அதிர்ச்சித் தகவல்.!

ஓடும் பேருந்தில் முத்தம் கொடுக்கச் சொல்லி பெண்களை சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல்; வெளியான அதிர்ச்சித் தகவல்.!


sex-tourcher---london-bus---urukuve-girls

உருகுவே நாட்டை சேர்ந்த இரண்டு பெண்கள் மெலானா கெய்மோட் மற்றும் கிறிஸு. தோழிகளான இவர்கள் இருவரும் லண்டன் மாநகரை சுற்றி பார்ப்பதற்காக சுற்றுலா பயணம் சென்றுள்ளனர். சம்பவம் நிகழ்ந்த அன்று லண்டன் மாநகரத்தில் உள்ள கேம்டவுனில் ஒரு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இவர்களை நோட்டமிட்ட நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்கள் ஏறிய அதே பேருந்தில் ஏறி உள்ளார்கள். அவர்களது நடத்தையில் சந்தேகம் அடைந்த அந்த இரண்டு பெண்களும் பேருந்தின் மேல் தளத்திற்கு சென்றுள்ளார்கள். திரும்பவும் அவர்களை பின் தொடர்ந்து அவர்கள் அங்கேயும் சென்றுள்ளனர். தோழிகளான அவர்கள் இருவரையும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று கருதிய அக்கும்பல் அவர்களை சீண்டத் தொடங்கினார்.

sex torture

ஒரு கட்டத்தில் எல்லை மீறிய அவர்கள் தங்களுக்கு முத்தம் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தி உள்ளார்கள். அதற்கு அந்த இரண்டு பெண்களும் மறுப்பு தெரிவிக்கவே சரமாரியாக தாக்குதலை நடத்தியுள்ளனர். அதனால் அந்த இரண்டு பெண்களும் பலத்த ரத்த காயங்கள் அடைந்துள்ளனர். 

இவர்களின் அலறல் சத்தம் கேட்டதும் பேருந்து நின்றுள்ளது. உடனே அந்த மர்ம கும்பல் அவர்களிடம் இருந்த பணம் பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த தகவலை பேஸ்புக்கில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான மெலானா பதிவிட்டுள்ளார். 
மேலும், லண்டன் நகரம் இரவில் கொடூரமானதாக இருக்கிறது. பெண்கள் கும்பலான ஆண்களினால் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.