இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க, பாக். உளவுத்துறை திட்டம்.. இந்தியாவிற்கு பரபரப்பு எச்சரிக்கை.!

இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க, பாக். உளவுத்துறை திட்டம்.. இந்தியாவிற்கு பரபரப்பு எச்சரிக்கை.!



pakistan-spy-team-try-to-peace-of-india-destroy

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி காவல் உளவுத்துறை தலைமை அலுவலகத்தில் ராக்கெட் உதவியுடன் கையெறிகுண்டு வீசப்பட்டது. காலிஸ்தான் பயங்கரவாதிகள் 2 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ள நிலையில், அதுகுறித்த விசாரணை நடந்து வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் களமிறங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் உளவுத்துறை புதிய பயங்கரவாத அமைப்பை உருவாக்கி இருப்பதாகவும், அதற்கு லஷ்கர்-இ-கல்சா என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த இயக்கத்திற்காக ஆட்கள் தேர்வு நடந்து வருவதாகவும் சந்தேகிக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்கானிய பயங்கரவாதிகள் ஜம்முவில் பிரிவினைவாதிகளை ஒன்றிணைத்து சதித்திட்டம் செயல்படுத்தி வருவதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது. இந்த செயல்திட்டத்தை முறியடிக்க தேவையான நடவடிக்கையையும் இந்தியா எடுத்து வருகிறது.