#Breaking: பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் வீதிகளில் தஞ்சம்..!

#Breaking: பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்: மக்கள் வீதிகளில் தஞ்சம்..!



pakistan-earthquake-20-dec-2023


துருக்கி-சிரியா நிலநடுக்கத்தை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான்-ஆபாகிஸ்தானை மையமாக வைத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் 2 ஆயிரம் உயிர்களையும், நேபாளத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கம் 150 உயிர்களையும் பறித்து இருந்தது. 

இந்நிலையில், பாகிஸ்தானில் ஒரு வாரத்திற்குள்ளாக இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணிக்கு மேல் மீண்டும் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

உள்ளூர் மக்களால் நிலநடுக்கம் தொடர்பான பல்வேறு பதிவுகள் எக்ஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. தற்போது வரை அரசு தரப்பில் அவை உறுதிசெய்யப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த விபரம் இல்லை.