இப்படியொரு கொடூரனா.! துடித்துடித்த மனைவி! ஈவு இரக்கமின்றி பார்க்கிங்கில் கணவர் அரங்கேற்றிய கொடூரம்!!

இப்படியொரு கொடூரனா.! துடித்துடித்த மனைவி! ஈவு இரக்கமின்றி பார்க்கிங்கில் கணவர் அரங்கேற்றிய கொடூரம்!!



husband killed wife in america

அமெரிக்கா ஃபுளோரிடா பகுதியில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பிலிப் மேத்யூ. இவரது மனைவி 26 வயது நிறைந்த மெரின் ஜாய். இவர் மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினைகள் எழுந்து வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் வெறுப்படைந்த மெரின் ஜாய் கணவனை பிரிந்து வாழ முடிவு செய்துள்ளார். இந்நிலையில் அவரது கணவர்  அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். அண்மையில் பணிக்குச் சென்ற மெரின் ஜாய் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவர் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக சந்தேகமடைந்த பிலிப் மனைவி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார்.

     Husband

அங்கு அப்பொழுதுதான் அவர் வீடு திரும்புவதற்காக பார்க்கிங்கில் கிளம்பியுள்ளார். அப்போது கோபத்தில் இருந்த பிலிப் மனைவி மீது காரில் மோதி, பின் 17 முறை கத்தியால் துடிதுடிக்க குத்தியுள்ளார். அதிலும் அவர் உயிர் பிரியாதநிலையில் காரை அவர் மீது ஏற்றி உடலை நசுக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்தவர்கள் மெரின் ஜாயை மீட்க முயன்றபோது அவர் தன்னை கொன்றது கணவர்தான் என கூறிவிட்டு உயிரிழந்துள்ளார். பின் வழக்குபதிவு செய்த போலீசார் பிலிப் மேத்யூவை கைது செய்துள்ளர். மேலும் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.