வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு பொருள் போதும், அதிசயத்தை கண்கூடாக பார்க்கலாம்- என்ன தெரியுமா!

வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு பொருள் போதும், அதிசயத்தை கண்கூடாக பார்க்கலாம்- என்ன தெரியுமா!



how-to-increase-money-in-easy-tips

பச்சை கற்பூரத்தை ஒரு பேப்பரில் மடித்து பணப்புழக்கம் அதிகம் உள்ள இடங்களான டெய்லி நாம் பயன்படுத்தும் பர்சில், பீரோ மற்றும் பண பெட்டி போன்ற இடங்களில் வைக்கும் போது பணம் குறையாமல் அதிகம் வந்து சேரும். மேலும் சாமி வைத்திருக்கும் பூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வையுங்கள் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்.

பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிக அளவில் உண்டு. சாதாரணமாக பச்சை கற்பூரத்தை பாறை மீது தடவினால் அந்த பாறையில் விரிசல் உண்டாகும். ஆனால் திருப்பதி  பெருமாளின் திருமேனியில் வருடம் முழுவதும் பச்சை கற்பூரம் தடவப்படுகிறது. ஆனால் சிலாதோரணம் என்ற அந்த பாறை மீதும்,  திருப்பதி பெருமாள் திருமேனியின் மீதும்  தடவினாலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.அதனால்தான் திருப்பதியில் பணம் அதிகமாக குவிகிறது.

karpooram

ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தீபம் காண்பித்து வழிபட்டு வந்தால் வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும். மேலும் வீண் செலவுகள் குறைந்து பண பெட்டியில் பணம் மளமளவென பெருகுவதைக் காணலாம்.