கொரோனா தடுப்பூசி கோவிஷீல்டு செலுத்திக் கொண்டவர்களுக்கு; அதிக அளவில் மாரடைப்பு... ஆய்வில் பகீர் தகவல்...!



For those who have paid Corona vaccine Govishield; High rate of heart attacks... The study has shared information...

இந்தியா முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த தடுப்பூசிகள் பெருமளவு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த தடுப்பூசி குறித்த ஆய்வு அறிக்கைகள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கோவிஷீல்டு தடுப்பூசி பயன்படுத்துவதை சில நாடுகள் நிறுத்திவிட்டன. இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரிட்டன் மருத்துவர் மல்கோத்ரா இது குறித்து தெரிவித்திருக்கும் கருத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசிகள் மிகவும் ஆபத்தானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த தடுப்பூசியால் ரத்த நாளங்கள் இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவதாகவும், இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் மக்களிடையே அதிக அளவில் ஏற்படுவதாகவும் எச்சரிக்கை செய்து உள்ளார்.

மருந்து நிறுவனங்கள் லாபம் ஏற்றுவதை நூலாக கொண்டுள்ளனர் அவர்களுக்கு இல்லை என்ற அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். மேலும் ஆய்வாளர்கள் கொரோனா தடுப்பூசிகளின் மாதிரிகள் அவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வில் அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளியாகி உள்ளன. மற்ற தடுப்பூசிகளை விட கோவிஷீல்டு மிகவும் ஆபத்தானவை என்று தெரியவந்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி ரத்த நாளங்களில் குறிப்பிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துவதையும், மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். ஒப்பிட்டு அளவில் சைபர் நிறுவனத்தின் தடுப்பூசியை விட கோவிஷீல்டு ஆபத்தானவை என்று வகைப்படுத்தி உள்ளனர்.

கோவிஷீல்டு தடுப்பூசிகளால் ஏற்பட்ட பக்க விளைவுகளை கண்டறிந்த உடன் பிரிட்டனில் அதன் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி ஐரோப்பாவிலும் இந்த தடுப்பூசிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.