ஆசையாக மீன் சாப்பிட்ட கணவர்! அடுத்த நொடியே மீனால் கணவருக்கு ஏற்ப்பட்ட விபரீதம்! சோகத்தில் தவிக்கும் கர்ப்பிணி மனைவி!
ஆசையாக மீன் சாப்பிட்ட கணவர்! அடுத்த நொடியே மீனால் கணவருக்கு ஏற்ப்பட்ட விபரீதம்! சோகத்தில் தவிக்கும் கர்ப்பிணி மனைவி!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தை சேர்ந்தவர் அலெக்சாண்டர் ஹால்-கசாண்ட்ரா ஹெரால்டு தம்பதியினர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணமான சில மாதங்களில் கர்ப்பமானார் கசாண்ட்ரா.
ஒரு நாள் கர்ப்பிணியான தனது மனைவியை அழைத்து கொண்டு அலெக்சாண்டர் இரவு உணவு அருந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு அலெக்சாண்டர் பாரமுண்டி வகை மீனை ஆடர் செய்து சாப்பிட்டுள்ளார்.
சாப்பிட்ட அடுத்த நொடியே அலெக்சாண்டர் மூச்சற்று கீழே விழுந்துள்ளார். மேலும் அவரது உடல் முழுவதும் நீல நிறமாக மாறியுள்ளது. பதறிய கசாண்ட்ரா உடனே அவசர எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்வதற்குள் அலெக்சாண்டர் இறந்துள்ளார்.
அலெக்சாண்டரின் இறப்பை குறித்து அவரது மனைவி குழந்தையை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தார் அலெக்சாண்டர் ஆனால் இப்படி ஆகி விட்டதே என மிகவும் மனவேதனையுடன் கூறியுள்ளார்.மேலும் மீன் சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று கூறிய அடுத்த நொடியே இப்படி ஆகி விட்டது எனவும் அழுது புலம்பியுள்ளார்.