18 வருடம் கழித்து பிறந்த குழந்தை!! குழந்தையை கையில் வாங்கியதும் தந்தை செய்த காரியம்...! வைரல் வீடியோ..

18 வருடம் கழித்து பிறந்த குழந்தை!! குழந்தையை கையில் வாங்கியதும் தந்தை செய்த காரியம்...! வைரல் வீடியோ..



father-love

18 வருடங்களுக்கு பிறகு தங்களுக்கு குழந்தை பிறந்த மகிழ்ச்சியில், தந்தை ஒருவர் மண்டியிட்டு அழும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டை சொர்க்கம் என்றே சொல்லலாம். வீட்டில் குழந்தை செல்வம்  இருந்தால் தான் பெற்றொர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். ஏனெனில் வீட்டையே கவலைகள் மறந்து கலகலப்பாக வைத்திருப்பவர்கள் குழந்தைகள்  தான். அவர்களின் சிரிப்பு மற்றும் சேட்டைகள் அனைத்தும் ரசிக்கும் வகையில் இருக்கும்.

இந்த குறிப்பிட்ட வீடியோவில், மருத்துவர் ஒருவர் குழந்தை  ஒன்றை கையில் கொண்டுவந்து தந்தையிடம் கொடுக்கின்றார். அந்த குழந்தையை கையில் வாங்கிக்கொண்ட தந்தை மறுநொடியில் தரையில் மண்டியிட்டு  மகிழ்ச்சியில் கதறியழுது கடவுளுக்கு நன்றி கூறுகிறார்.

18 வருடங்களுக்கு பிறகு  தனக்குப் பிறந்த குழந்தையை பார்த்ததால் குழந்தையின் தந்தை உணர்ச்சி பொங்க இவ்வாறு செய்துள்ளார். பின்பு அவரது குடும்பதில் அனைவரும்  மகிழ்ச்சியுடன் ஓடிவந்து  அவர்களும் கடவுளுக்கு நன்றி கூறி  குழந்தையை  பார்க்கின்றனர். இதோ  அந்த வீடியோ காட்சி....