கொரோனாவால் செத்துமடியும் உயிர்கள்! நேற்று ஒருநாள் மட்டும் அமெரிக்காவின் பலி எண்ணிக்கை எவ்வளவு? வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனாவால் செத்துமடியும் உயிர்கள்! நேற்று ஒருநாள் மட்டும் அமெரிக்காவின் பலி எண்ணிக்கை எவ்வளவு? வெளியான அதிர்ச்சி தகவல்!



Corona death increase

சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத்துவங்கிய கொரோனா வைரஸ், ஐரோப்பியா, அமெரிக்காவில் அதிகஅளவில் உயிர்பலி வாங்கி வருகிறது. ஐரோப்பியாவில் பலி எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ள நிலையில், அமெரிக்காவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றுவரை கொரோனாவால் உலக அளவில் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.  1 லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி இருந்தனர். இந்த எண்ணிக்கை இன்று உயர்ந்து உலக அளவில் 27 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 1 லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியும் உள்ளனர். 

corona

கொரோனாவால் இதுவரை 7 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,322 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனால் பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தினை நெருங்கி வருகிறது. அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் 8 லட்சத்து 80 ஆயிரத்து 204 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக பாதிப்புள்ள நாடாக கனடா(42,110) உள்ளது.