பொது இடத்தில் காபி குடிப்பதெல்லாம் ஒரு தவறா!- இளம் ஜோடிக்கு  நிகழ்ந்த கொடூரம்.

பொது இடத்தில் காபி குடிப்பதெல்லாம் ஒரு தவறா!- இளம் ஜோடிக்கு  நிகழ்ந்த கொடூரம்.



coffee drink in commen place

வெனிஸ் நகரிலுள்ள ரியால்டோ பாலத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து ஜெர்மனியயை சேர்ந்த இளம் ஜோடியினர் காபி போட்டு குடித்துள்ளனர்.

இதனை பார்த்த சிலர் இந்த இடத்தில் இவ்வாறு நடந்துகொள்ளகூடாது என அந்த ஜோடியினரை கண்டித்துள்ளனர்.அதையெல்லாம் கண்டுகொள்ளாத அந்த இளம் ஜோடியினர் காபி குடித்துள்ளனர்.

இதனால் கோபமான பொதுமக்கள் அவர்களை வெனிஸ் நகரில் உள்ள  மேயர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து விரைந்து வந்த போலீசார் அவர்களை பிடித்து 853 பவுண்ட் அபராதம் விதித்தனர். இது இந்திய மதிப்பு படி சுமார் ரூ.75 ஆயிரம் ஆகும்.

அதுமட்டும் இன்றி அந்த ஜோடியினர் அந்நாட்டை விட்டு வெளியேறவேண்டும் எனவும் உத்தரவிட்டனர். பொது இடத்தில் காபி குடிப்பதெல்லாம் ஒரு தவறா? இதெல்லாம் ஒரு காரணமா  நகரை விட்டு வெளியேற்ற என பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.