கிணற்றில் குளித்து வந்த மாணவியை... வன்புணர்வு செய்ய முயற்சி... தேர்வில் கலந்து கொள்ள முடியாத சோகம்.!



an-unidentified-man-was-trying-to-assult-a-girl-when-sh

வீட்டு தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த மாணவியை  மறைந்திருந்த நபர் ஒருவர் வன்புணர்வு செய்ய முயன்ற சம்பவம் இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண்ணும் தாயாரும் கொடுத்த புகாரின் அடிப்படையில்  காவல்துறை விசாரணை செய்து வருகிறது.

இலங்கை நாட்டின் நிட்டம்புவை  பகுதியைச் சார்ந்த மாணவி ஒருவர் தனது வீட்டில் இருக்கும் கிணற்றில் குளித்துவிட்டு  வீடு திரும்பி இருக்கிறார். அப்போது மறைந்திருந்த  மர்ம நபர் ஒருவர் அந்த மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டும் உள்ளார் . அப்போது அந்த மாணவி அலறி சத்தம் கொடுக்கவே  வீட்டில் இருந்தவர்கள் ஓடி வந்திருக்கின்றனர். அதனைக் கண்ட அந்த மருமகளை அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

Crime

இதனைத் தொடர்ந்து தலைமையக காவல் பிரிவின் சிறுவர் மற்றும் பெண்கள் விவகார  பிரிவில்  அந்தப் பெண்ணும் அவரது தாயாரும் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் தீவிரமான நடவடிக்கை எடுப்பதாக  காவல்துறை தெரிவித்து இருக்கிறது. மேலும் தப்பியோடிய அந்த நபரையும் தொலைபேசி தேடி வருகின்றனர்.

மேலும் அந்த மாணவி இந்த வன்புணர்வும் முயற்சியில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக நேற்று நடைபெற இருந்த பரிட்சையில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை எனவும் அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.