கர்ப்பிணி நாய், பூனை விஷம் வைத்துக்கொலை: 51 வயது பெண்மணி அதிர்ச்சி செயல்.!

கர்ப்பிணி நாய், பூனை விஷம் வைத்துக்கொலை: 51 வயது பெண்மணி அதிர்ச்சி செயல்.!



America Florida Women Killed Dog and Cats 

 

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணம், போல்க் பகுதியைச் சார்ந்த பெண்மணி தமீசா கிங்டம் (வயது 51). 

கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி இவர் தனது வீட்டிற்கு அருகே உள்ள நாய்கள் பராமரிப்பு மையத்திலிருந்த பூனை மற்றும் கர்ப்பிணி நாயை விஷம் வைத்து கொலை செய்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், ஜனவரி 4ஆம் தேதி பெண்மணியின் மீதான குற்றச்சாட்டு உதவி செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். 

மர்மமான முறையில் செல்லப்பிராணிகள் உயிரிழப்பதாக அதன் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் உண்மை அம்பலமானது. 

அதிகாரிகளிடம் பெண்மணி தான் மொத்தமாக 8 நாய்க்குட்டிகளையும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். இதனை பதிவு செய்த அதிகாரிகள் பெண்ணை சிறையில் அடைத்தனர்.