AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
இன்று முதல் யுபிஐ பரிவர்த்தனையில் இனி PIN நம்பர் இல்லை! கைரேகை தான்... புதிய அதிரடி பாதுகாப்பு முறை வசதி!
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதிய பாதுகாப்பு மாற்றம் ஒன்று யுபிஐ பயனர்களுக்கு நம்பிக்கையையும் வசதியையும் அளிக்கிறது. இப்போது பரிவர்த்தனைகள் செய்யும்போது PIN எண்ணை நினைவில் வைத்திருக்க தேவையில்லை; அதற்குப் பதிலாக உயர் தொழில்நுட்ப அடிப்படையிலான அங்கீகார வசதி அறிமுகமாகியுள்ளது.
பயோமெட்ரிக் மூலம் யுபிஐ பரிவர்த்தனை
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் முக்கிய பங்கு வகிக்கும் யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) தினமும் கோடிக்கணக்கான பரிவர்த்தனைகளைச் செய்கிறது. யுபிஐ PIN எண்களை பயன்படுத்தும் போது ஏற்படும் நிதி மோசடிகளை தவிர்க்க, ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின் பேரில் தேசிய பணப் பரிவர்த்தனைக் கழகம் (NPCI) புதிய பாதுகாப்பு முறையை அறிவித்துள்ளது.
புதிய பாதுகாப்பு வசதி
இந்த புதிய நடைமுறையின் மூலம் இனி PIN எண்ணை உள்ளிடாமல், பயோமெட்ரிக் அங்கீகாரம் வழியாக யுபிஐ பரிவர்த்தனைகள் செய்ய முடியும். இதற்காக கைரேகை (Fingerprint) மற்றும் முக அங்கீகாரம் (Face Recognition) ஆகியவற்றை பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாளை முதல் Google Pay, Phone Pay பயன்பாட்டில் புதிய கட்டுப்பாடுகள்! இனி ஒரு நாளைக்கு 50 முறை மட்டும்தான்! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க...
ஆதார் தரவின் பயன்பாடு
இந்த அங்கீகார செயல்முறையில், ஆதார் தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டுள்ள பயோமெட்ரிக் தகவல்கள் பயன்படுகின்றன. இதன் மூலம் பரிவர்த்தனைகள் மேலும் பாதுகாப்பாகவும் வேகமாகவும் நடைபெறும். இன்று (அக்டோபர் 8) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய முறை, பயனர்களுக்கு பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும்.
இந்த புதிய முயற்சி, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியில் ஒரு முக்கிய கட்டமாகும். இது யுபிஐ பரிவர்த்தனைகளை மேலும் நம்பகமானவையாக மாற்றி, நாட்டின் நிதி பாதுகாப்பை புதிய நிலைக்கு கொண்டு செல்லும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: மக்களே இனி டபுள் போனஸ்! நாளை முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்! பிரதமர் மோடி அறிவிப்பு..