லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய இளைஞன் செய்த மோசமான செயல்! சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள்!

லாட்ஜில் ரூம் எடுத்து தங்கிய இளைஞன் செய்த மோசமான செயல்! சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள்!



young-man-theft-led-tv-in-lodge


சென்னை விழுப்புரத்தில்தனியார் தாங்கும் விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை , கையில் காலிப் பெட்டியுடன் வந்த இளைஞர் ஒருவர், ஆதார் அட்டையை காண்பித்து அறை எடுத்துள்ளார்.

அறைக்குள் சென்ற அந்த இளைஞர் சிறிது நேரத்திலேயே அறையை பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் அறைக்கு திரும்பவில்லை. நீண்ட நேரமாக விடுதி ஊழியர்கள் அந்த இளைஞருக்காக காத்திருந்தனர். ஆனால் அவர் அறைக்கு திரும்பவில்லை.

lodge

இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் தங்களிடம் இருந்த மாற்றுச் சாவி மூலம் அறையை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அந்த அறைக்குள் பொருத்தப்பட்டிருந்த 22 இன்ச் LED டிவி திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை பார்த்த போது, கையில் பெட்டியுடன் வந்த இளைஞன், அந்த பெட்டியின் உள்ளே டிவியை மறைத்து வைத்து கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும், அந்த இளைஞன் கொடுத்த ஆதார் அட்டை போலியான ஆதார் அட்டை என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அங்கு இருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.