ஓடும் பேருந்தில் பெண் கழுத்தறுத்து கொலை... கொடூர சம்பவம்...!!

ஓடும் பேருந்தில் பெண் கழுத்தறுத்து கொலை... கொடூர சம்பவம்...!!



Woman strangled to death in moving bus...horrific incident...!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரு​கில் உள்ள கணவாய்ப்பட்டி பங்களா பகுதியில் வசித்து வந்தவர் கோபி. திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரின் மனைவி ​தமயந்தி (42). தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

​இந்நிலையில்,  தமயந்தி நேற்று மாலை நான்கு மணியளவில் ​​​வழக்க​றி​ஞரைச் சந்திப்பதற்காக, ​தனியார் பேருந்தில் திண்டுக்கலுக்கு ​சென்றார். உலுப்பக்குடியி​லிருந்து திண்டுக்கலை நோக்கிச் ​சென்ற பஸ்சில் ​தமயந்தி ​​ஏ​றினார். அதே பஸ்சில், ராஜாங்கம் அவரின் 14 வயது மகனுடன் ஏறினார்.

​கோபால்பட்டியை அடுத்த வடுக்கப்பட்டி அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது, ராஜாங்கம் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ​தமயந்தியின்​ கழுத்தில் வெட்டினார். இ​தைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர். அலறல் சத்தத்தை கேட்ட ஓட்டுநர் பஸ்சை நிறுத்தினார். இதற்கிடையே ராஜாங்கம், மகனை விட்டுவிட்டு, பஸ்சில் இருந்து இறங்கி ​தப்பி ​ஓடினார்.

கழுத்தில் பலமாக வெட்டு பட்டதால்​தமயந்தி பஸ்சில் ​உட்கார்ந்திருந்த நிலையிலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சாணார்பட்டி காவல்துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று தமயந்தியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.​ ​

சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தனிப்படை அமைத்து தப்பியோடிய ராஜாங்கத்தைத் தேடிப் பிடிக்க உத்தரவிட்டுள்ளார். மாலை நேரத்தில் பேருந்துக்குள் வைத்து நடந்த கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.