3 பேருடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

3 பேருடன் சேர்ந்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!



Wife with relatives killed husband

உறவினர்களுடன் சேர்ந்து மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம். வெங்காய வியாபாரியானா இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இதில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான சிவலிங்கம் தினமும் குடித்துவிட்டு தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

trichy

இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், இதுகுறித்து தனலட்சுமி தனது உறவினர்களும் கூறியுள்ளார். அப்போது அவரது உறவினர்களான ஆறுமுகம், செந்தில்குமார் மற்றும் சுமதி ஆகியோர் சிவலிங்கத்தின் வீட்டுக்கு சென்று அவரை வாக்குவாதம் செய்தனர்.

 அப்போது அங்கு ஏற்பட்ட தகராறு தனலட்சுமி தனது உரிமையாளர்களுடன் சேர்ந்து இரும்பு கம்பியால் தனது கணவரை அடித்து அடித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் உடலை எரித்து மறைக்க திட்டமிட்ட 4 பேரும் நவலூர் குட்டப்பட்டு பாலத்துக்கு அடியில் சிவலிங்கத்தின் உடலை எரிக்க திட்டமிட்டுள்ளனர். 

trichy

அந்த வகையில் சிவலிங்கத்தின் உடலை காரில் ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த போலீசார் காரை நிறுத்த முயற்சி செய்துள்ளனர். இதனை கண்டதும் காரில் இருந்தவர்கள் தப்பி ஓட முயற்சி செய்தார். அதனைத்தொடர்ந்து காரை சோதனை செய்ததில் சாக்கு மூட்டையில் சிவலிங்கத்தின் உடல் இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

 மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தனலட்சுமி, ஆறுமுகம், சுமதி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர் தப்பியோடி தலைமறைவாக உள்ள செந்தில்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.