பட்டாசு ஆலை வெடித்து சிதறி துயரம்; 4 பேர் பலி., 10 பேர் படுகாயம்.. விருதுநகரில் சோகம்.!



Virudhunagar Sivakasi Firecrackers Factory Explodes 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, செங்கமலபட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.

வெடித்து சிதறிய பட்டாசு ஆலை:

இன்று வழக்கம்போல பணியாளர்கள் தங்களின் வேலைகளை கவனித்து வந்த நிலையில், திடீரென ஆலை வெடித்து சிதறியது.

இந்த விபத்தில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில், வேலையில் இருந்த 4 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர். 

10 பேர் படுகாயம், 4 பேர் பலி:

மேலும், 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த காரணத்தால், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.