பேங்க் ஆபிசர்களின் கள்ளக்காதல்.. காருக்குள் நடந்த பயங்கரம்.. மனைவியின் உடலை பார்த்து கதறியழுத கணவன்..! 

பேங்க் ஆபிசர்களின் கள்ளக்காதல்.. காருக்குள் நடந்த பயங்கரம்.. மனைவியின் உடலை பார்த்து கதறியழுத கணவன்..! 



Viluppuram Kiliyanur Bank Employees Death Mystery Confirmed Affair Ends Murder Suicide 

 

தான் ஆத்மார்த்தமாக திருமணத்திற்கு பின் காதலித்த கணவன், மனைவியை விடுத்து புதிதாக கிடைத்த கள்ளக்காதல் உறவை நம்பினால் இறுதியில் என்ன மாதிரியான விபரீதம் நேரும் என்பதற்கு சாட்சியாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர், கூத்தப்பாக்கம் கிராமத்தில் உள்ள, புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் வாலிபரின் உடல் தலை நசுங்கி இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்கப்பட்டது. கிளியனூர் காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இளைஞரின் உடல் மீட்கப்ட்டதில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கேட்பாரற்ற காரும் இருந்தது. 

காரை அதிகாரிகள் சோதனை செய்தபோது, காரில் முன் இருக்கையில் பெண்மணி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக இருந்தார். இளம்பெண்ணின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனையடுத்து, இளம்பெண்ணை கொலை செய்த வாலிபர், ஏதேனும் வாகனத்தின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்தனர். விசாரணையில் கள்ளகாதலால் நடந்த சோகம் வெளிச்சத்திற்கு வந்தது.

சென்னையில் உள்ள கிழக்கு தாம்பரம், சிவஞானம் தெருவில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவரின் மகன் கோபிநாத் (வயது 31), மனைவி சாந்தா பிரீத்தி (வயது 28). தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் பிரீத்தி மருந்து கடை வைத்து நடத்தி வருவதால், குடும்பத்துடன் அப்பகுதியில் தம்பதிகள் தங்கியிருந்துள்ளனர்.  

மரக்காணம் நகரில் உள்ள தனியார் வங்கியில் கோபிநாத் வேலை பார்த்து வந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் வாங்கிக்கிளையில் அவர் வேலை பார்த்துவந்தபோது, சக ஊழியர் மதுரா (வயது 28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர் முந்திரி வியாபாரி சுரேஷின் மனைவி ஆவார். தம்பதிகளுக்கு ஆண் குழந்தை இருக்கிறது.

Viluppuram

கோபிநாத் - மதுரா இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் பிரீத்திக்கு தெரியவரவே, அவர் தனது கணவரை கண்டித்துள்ளார். இதனை கண்டுகொள்ளாத கோபிநாத், மதுராவுடன் தொடர்ந்து உறவில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையில், ரெட்டியார்பாளையம் கிளையில் மதுரா மேலாளராக பதவி உயர்த்தப்பட்டு பணியமர்த்தப்பட்டார்.

பணிக்காக அவர் புதுச்சேரி லாஸ்பேட்டை, ஒளவை நகரில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். அவ்வப்போது கள்ளக்காதல் ஜோடி மதுரா - கோபிநாத் வழக்கத்தை விட அதிகமாக நேரில் சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளது. இருதரப்பு வீட்டாருக்கும் இவ்விவகாரம் தெரியவந்து குடும்பத்தில் சச்சரவுகள் தொடர்ந்துள்ளது. இது கள்ளக்காதல் ஜோடியிடையேவும் வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளன.

இதற்கிடையில், இருவரும் திண்டிவனம் வரை சென்றுவிட்டு, மீண்டும் புதுச்சேரிக்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தனர். அச்சமயம் கள்ளக்காதல் ஜோடியிடையே வாக்குவாதம் ஏற்பட, ஆத்திரமடைந்த கோபிநாத் மதுராவை கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்தார். மதுரா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

ஆத்திரத்தில் கொலை செய்ததை உணர்த்த கோபிநாத், அடையாளம் தெரியாத வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்தது. சுரேஷ் தனது மனைவி கொலை செய்யப்பட்டதை அறிந்து, குழந்தையுடன் நேரில் வந்து மதுராவை பார்த்து கதறியழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாகியது.