"அறம் வெல்லும்", தனக்கு எதிரான குற்றங்களுக்கு மறுப்பு தெரிவித்து விக்ரமன் பதில் ட்வீட்.!!

"அறம் வெல்லும்", தனக்கு எதிரான குற்றங்களுக்கு மறுப்பு தெரிவித்து விக்ரமன் பதில் ட்வீட்.!!



vikraman-caught-in-a-love-scam

"டந்த சில மாதங்களாக மிகுந்த வேதனையையும் பெரும் ஏமாற்றத்தையும் அனுபவித்த பிறகு, நான் பொதுவில் எழுதுகிறேன். 2013 ஆம் ஆண்டு முதல் நான் விருந்தினராக கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் விக்ரமன் பங்கேற்றார். ஆகஸ்ட் 2020 இல் நான் லண்டனுக்குப் புறப்பட்டபோது, ​​அவர் தானாக முன்வந்து என்னை சென்ட் ஆப் செய்ய விமான நிலையத்துக்கு வந்தார்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு அக்டோபர் 2020 இல், அவர் என்னுடன் ஒரு காதல் உறவைத் தொடர்ந்தார். 2 நாட்களுக்குள்,  விடுதலை சிறுத்தை கட்சி தலைவரால் அவர் கட்சியில் சேர அழைக்கப்பட்டதாக பொய் சொன்னார். அப்போதிருந்து அவர் தனது அரசியல் வாழ்க்கைக்கு அளவற்ற ஆதரவை தெரிவித்து வந்தார். 

அவருடைய அரசியல்-அறிவுசார்-நிதிச் சுரண்டல் மற்றும் சந்தர்ப்பவாதத்தை நான் எதிர்கொண்டபோது, ​​அவர் சாதிவெறி பிடித்தும், என்னிடம் அவதூறாகவும் நடந்துகொண்டார். நான் இடைவெளியை கடைபிடிக்கும் போது என்னிடம் அழுது, கெஞ்சுவார். அதன்பிறகு, நான் சரியாக இருப்பேன் என்று என்னை சமாதானப்படுத்துவார். ஆனால் அவர் திருந்தவே இல்லை.

மேலும், விக்ரமன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்துள்ளார். அவரது ட்விட்டர் பக்கம் நீண்டு கொண்டே செல்கிறது. தகுந்த ஆதாரங்கள், புகைப்படங்கள், மெசேஜ் சிகிரீன் ஷாட் என்று எல்லாத்தையும் வெட்ட வெளிச்சமாகியுள்ளார் வழக்கறிஞர் கிருபா. 

இதற்கு மறுப்பு தெரிவித்து விக்ரமன் அவரது பங்கிற்கு ஆதாரங்களை வெளியிட்டு பதிவு செய்து அறம் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.