பள்ளி கழிவறையில் 7ம் வகுப்பு மாணவியை தீண்டிய பாம்பு; வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!

பள்ளி கழிவறையில் 7ம் வகுப்பு மாணவியை தீண்டிய பாம்பு; வேலூரில் அதிர்ச்சி சம்பவம்.!



vellore-gudiyatham-olakasi-govt-school-student-bite-by

File Pic

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், ஓலக்காசி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள். 

இந்நிலையில், நேற்று காலை 7ம் வகுப்பு பயின்று வரும் மாணவி பூமிகா கழிப்பறைக்கு சென்றுள்ளார். அங்கு பாம்பு ஒன்று இருந்துள்ளது. 

vellore

File pic 

பாம்பு மாணவியின் கால்களில் தீண்டிவிடவே, அலறியடித்து மாணவி வெளியே வந்து இருக்கிறார். இதனையடுத்து, ஆசிரியர்கள் மாணவியை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். 

அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்ததை தொடர்ந்து, மாணவி உடல்நலத்துடன் இருக்கிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.