பள்ளி மாணவிகளிடம் தகாத செயலில் ஈடுபட்ட வேன் கிளீனர்!!

பள்ளி மாணவிகளிடம் தகாத செயலில் ஈடுபட்ட வேன் கிளீனர்!!



Van cleaner arrested for abused the School Girls

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முதுகுளத்தூர்  என்னும் ஊரில் இயங்கி வரும் பள்ளியில் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதால் வேன் கிளீனரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் பள்ளி ஒன்றில் வேன் கிளீனர் ஆக இருப்பவர் 19 வயதான திருப்பதி. இவர் அவரது வேனில் வருகின்ற மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

இது குறித்து மாணவிகள் அவர்களது பெற்றோரிடத்தில் தெரிவித்ததை தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

பின்னர், அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கிளீனர் திருப்பதியை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.