ஒரே நாளில் இரண்டு அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி.!

ஒரே நாளில் இரண்டு அதிமுக எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி.!


two ADMK mla affected by corona


கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்தநிலையில் பொதுமக்களுக்கு உதவி செய்யும் வகையில் ஆரம்பத்திலிருந்து அரசு, தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் ,என பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

admk mla

இந்தநிலையில், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரி முருகனுக்கும், மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ மாணிக்கத்திற்கம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 29 எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.