நம்ப முடியாமல் தவிக்கின்றேன்.! துயரம் தொண்டையை அடைக்கிறது.! கதறும் டிடிவி தினகரன்.!

நம்ப முடியாமல் தவிக்கின்றேன்.! துயரம் தொண்டையை அடைக்கிறது.! கதறும் டிடிவி தினகரன்.!


ttv-dhinakaran-talk-about-vetrivel

அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு கடந்த ஒரு வாரத்துக்கு முன்னதாக சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அதில் வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, வீட்டிலேயே தனிமைப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்தநிலையில், திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு செயற்கை சுவாசம் முறையில் சிகிச்சையளிக்கப்பட்டுவந்தது. அவர், ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர். இந்தநிலையில் அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிச்சைபலனின்றி இன்று காலமானார். இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், எனது இனிய நண்பருமான திரு p.வெற்றிவேல் முன்னாள் எம்எல்ஏ அவர்கள் மறைந்தார் என்ற செய்தியை நம்ப முடியாமல் தவிக்கின்றேன்.  மிகுந்த வேதனையும் சொல்ல முடியாத துயரமும்  எனது தொண்டையை அடைக்கிறது. புரட்சித்தலைவி அம்மா மற்றும் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் பேரன்பை பெற்றவர். என் மீது அளவில்லாத பாசம் கொண்டவர். எதனையும் உரிமையோடு பளிச்சென பேசுபவர். எது நடந்தாலும் நான் தியாகத்தின் பக்கம் உண்மையின் பக்கமே நிற்பேன் என்று உறுதிபடச் சொல்லி இறுதிவரை கழகத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர். 

TTV

 துரோகத்திற்கு எதிராக நாம் நடத்தி வருகிற புனித போரில் ஒரு தளபதியாக நம்மோடு களத்தில் நின்றவர். வெற்றி.. வெற்றி... என வாய் நிறைய அழைத்து இனி யாரிடம் பேச போகிறோம் என்று நினைக்கிற போதே எதற்காகவும் கலங்காத என் உள்ளம் கலங்கி தவிக்கிறது. திரு வெற்றிவேல் அவர்களின் மறைவு கழகத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இன்றி தவிக்கின்றேன். நம்முடைய லட்சியப்பயணத்தில் வெற்றிவேல் என்கிற பெயர் எப்போதும் நிலைத்திருக்கும். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்" என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.