சிறுமிகளை சித்ரவதை செய்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பயங்கரம்..! கணவன் - மனைவி பரபரப்பு வாக்குமூலம்.!

சிறுமிகளை சித்ரவதை செய்து, விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பயங்கரம்..! கணவன் - மனைவி பரபரப்பு வாக்குமூலம்.!



Tripura Minor Girl Forced Prostitution by Husband Wife Name of Tamilnadu Beautician Job

பூப்படையாத 14 வயது சிறுமி முதல், 17 வயதுள்ள சிறுமிகளை திரிபுராவில் இருந்து சென்னைக்கு வேலை வாங்கித்தருவதாக அழைத்து வந்து பாலியல் தொழில் செய்யும் கும்பலிடம் விற்பனை செய்து வருமானம் பார்த்த தம்பதி குறித்த பகீர் தகவல் தெரியவந்துள்ளது. மேலும், கடமையை செய்ய தவறிய 3 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலையில் செயல்பட்டு வரும் தனியார் விடுதியில், 4 பெண் சிறுமிகள் இருப்பதாக பூக்கடை காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் சிறுமிகளை மீட்டனர். மேலும், அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தப்பி செல்ல முயற்சித்த பெண் உட்பட 4 பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 

சிறுமிகளிடம் நடந்த விசாரணையில், "திரிபுரா மாநிலத்தை சேர்ந்த பூப்படையாத 14 வயது சிறுமி, 15 வயது சிறுமி, 16 வயது சிறுமி, 17 வயது சிறுமிகளை அழகு நிலையத்தில் வேலைக்கு சேர்த்துக்கொள்வதாக பெங்களூர் அழைத்து வந்து, பின்னர் அங்கிருந்து சென்னை அழைத்து வந்துள்ளனர். சென்னையில் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கின்றனர். 

இதற்கு மறுப்பு தெரிவித்த சிறுமிகளை அடித்து, துன்புறுத்தியும் பாலியல் தொழிலாளியாக மாற்றிய நிலையில், இவர்கள் முதலில் கேளம்பாக்கத்தில் தங்க வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு ரூ.50 ஆயிரம் பணம் சம்பாதித்து தர வேண்டும், 6 பேருடன் உறவு வைக்க வேண்டும் என்று கூறி கொடுமை செய்துள்ளனர். சிறுமிகள் நள்ளிரவில் ஆட்டோவில் செல்வது, வருவதை கண்டு அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கே வந்த 3 காவலர்கள் விபச்சார கும்பலிடம் பணம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் சென்றுள்ளனர். 

Tripura

இதன்பின்னர் விபச்சார கும்பல் சிறுமிகளை யானைக்கவுனி வால்டாக்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் விடுதியில் தங்க வைத்த நிலையில், அவர்களை மீண்டும் பெங்களூர் அழைத்து செல்ல கடத்தல் கும்பல் திட்டமிட்டுள்ளது. 4 சிறுமிகளின் 1 சிறுமி எப்படியோ தப்பித்து, தனியார் விடுதிக்கு கீழே பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகளிடம் கண்ணீருடன் உதவி கேட்டுள்ளார். அதன்பின்னரே அதிகாரிகளுக்கு அனைத்து விஷயமும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமிகளின் பெற்றோரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களை அழைத்து வந்தது சலீமா என்ற பெண்ணும், அவரின் கணவர் அன்வர் உசேன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் மைதீன், அலாவுதீன் ஆகியோருடன் இணைந்து விபச்சார தொழில் செய்து வந்துள்ளனர். சிறுமிகளை முதலில் பாலியல் பலாத்காரம் செய்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தி சித்ரவதை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கின்றனர். சிறுமிகளை காப்பாற்றாமல் கையூட்டு பெற்று அலட்சியத்துடன் செயல்பட்ட 3 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.