தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது பச்சிளம் பிஞ்சு பரிதாப பலி.. பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள்.!

தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது பச்சிளம் பிஞ்சு பரிதாப பலி.. பெற்றோர்களே விழிப்புடன் இருங்கள்.!



Trichy 2 Aged Child Boy Died Fell Down Water Tank

திண்ணை அருகே விளையாடிக்கொண்டு இருந்த 2 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள உப்பிலியபுரம், கோட்டப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவர் கொத்தனாராக பணியாற்றி வருகிறார். சுப்பிரமணியனின் மனைவி சுதா. இந்த தம்பதிகளுக்கு கனிஸ்கா, ஹனீஷ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். .

ஹனீஷ் (வயது 2) வீட்டிற்கு வெளியே இருந்த திண்ணையில் நேற்று விளையாடிக்கொண்டு இருந்த நிலையில், திண்ணையை ஒட்டி இருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார். இதனால் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக ஹனீஷ் உயிரிழந்துள்ளார். 

trichy

சிறுவனை நீண்ட நேரம் பெற்றோர் தேடாத நிலையில், வெளியே வந்து பார்த்தபோது ஹரிஷ் தண்ணீர் தொட்டியில் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். மகனை மீட்ட பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஹனீஷ் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குழந்தைகள் உள்ள வீட்டில் பெற்றோர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.