ஒரே மாதத்தில் ரூ. 1.40 கோடி வருமானம் ஈட்டிய தக்காளி வியாபாரி..!! 



Tomato Farmer gain 1.40 crore in one month

மிழ்நாட்டில் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் தக்காளியின் விலை தற்போது அதிகரித்து வந்துள்ளதை தொடர்ந்து மக்கள் தக்காளி பயன்படுத்துவதையே நிறுத்திக் கொண்டார்கள் என்றே கூறலாம். பருவ மழை காலத்தால் வரத்து குறைந்து நஷ்டம் ஏற்பட்டதால் தக்காளியின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவித்திருந்தனர்.

இதனால் பல்வேறு பகுதிகளில் தக்காளி விலை 131 ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்து வந்த தற்போது 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் அவரது 12 ஏக்கர் சொந்த நிலத்தில் தக்காளி பயிர் செய்துள்ளார். இவருடன் இவரது மகன் மற்றும் மருமகள் அவர்களது நிலத்தில் தக்காளி பயிர் செய்துள்ளனர்.

தற்போது தக்காளியின் விலை அதிகரித்து காணப்படும் சூழலில் ஒரு தக்காளிப் பெட்டி ஏறத்தாழ ரூபாய் 1000 ரூபாய் முதல் ரூபாய் 2400 வரை வருமானம் பெற்றுள்ளனர்.

இதனால் ஒரே மாதத்தில் ரூ. 1.40 கோடி வருமானம் ஈட்டி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதே போல் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விவசாயியும் 38 லட்சம் வருமானம் ஈட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.