#JustIN: அமைச்சர்களுக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடும் எச்சரிக்கை; காரணம் இதோ..!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது அமைச்சர்கள் - முதல் அமைச்சர் இடையே பல்வேறு விஷயங்கள் தொடர்பான உரையாடல்கள் இடம்பெற்றன.
இந்நிலையில், கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், "அமைச்சர்கள் பொதுவெளிகளில் பேசும்போது கவனமாக செய்யப்பட வேண்டும். மூத்த அமைச்சர்கள் பொதுவெளிகளில் பேசியது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பேசுபொருளாகி இருக்கிறது.

ஆகையால் பொதுவெளிகளில் அமைச்சர்கள் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பேசும் நேரத்தில், வார்த்தை கவனத்துடன் பேச வேண்டும்" என கூறி கண்டித்து இருக்கிறார்.
முன்னதாக பல அமைச்சர்கள் பொதுவெளியில் அரசின் திட்டங்கள் குறித்து பேசுகையில், அவை சர்ச்சையான உரையாடல்களை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.